இலங்கைக்கு எதிரான போட்டியில் பிலிப்பைன்ஸ் வெற்றி

ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான போட்டியில் பிலிப்பைன்ஸ் வெற்றி

by Staff Writer 29-05-2019 | 7:31 PM
Colombo (News 1st) ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் முதலாம் பிரிவில் இலங்கைக்கு எதிரான போட்டியை பிலிப்பைன்ஸ் அணி வெற்றிகொண்டது. சைனீஸ் தாய்பேயில் நடைபெற்ற இந்தப் போட்டி கிண்ணத்திற்கான காலிறுதியாக அமைந்திருந்தது. போட்டியில் முதல் பகுதியில் 15-10 எனும் புள்ளிகள் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணி முன்னிலை வகித்தது. இரண்டாம் பகுதியில் பிலிப்பைன்ஸ் அணி மேலும் 24 புள்ளிகளைப் பெற்றது. எனினும், இலங்கை அணியால் 12 புள்ளிகளையே மேலதிகமாகப் பெற முடிந்தது. 39- 22 எனும் புள்ளிகள் பிரகாரம், பிலிப்பைன்ஸ் அணி வெற்றியீட்டியது. ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் முதலாம் பிரிவில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இலங்கை எதிர்வரும் முதலாம் திகதி விளையாடவுள்ளது.