by Staff Writer 29-05-2019 | 7:31 PM
Colombo (News 1st) ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் முதலாம் பிரிவில் இலங்கைக்கு எதிரான போட்டியை பிலிப்பைன்ஸ் அணி வெற்றிகொண்டது.
சைனீஸ் தாய்பேயில் நடைபெற்ற இந்தப் போட்டி கிண்ணத்திற்கான காலிறுதியாக அமைந்திருந்தது.
போட்டியில் முதல் பகுதியில் 15-10 எனும் புள்ளிகள் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பகுதியில் பிலிப்பைன்ஸ் அணி மேலும் 24 புள்ளிகளைப் பெற்றது.
எனினும், இலங்கை அணியால் 12 புள்ளிகளையே மேலதிகமாகப் பெற முடிந்தது.
39- 22 எனும் புள்ளிகள் பிரகாரம், பிலிப்பைன்ஸ் அணி வெற்றியீட்டியது.
ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் முதலாம் பிரிவில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இலங்கை எதிர்வரும் முதலாம் திகதி விளையாடவுள்ளது.