மாகந்துரே மதுஷிடம் வாக்குமூலம் பதிவு

மாகந்துரே மதுஷிடம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 28-05-2019 | 5:16 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் பொறுப்பிலுள்ள மாகந்துரே மதுஷிடம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்ஷித கடந்த 05 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரை பொறுப்பேற்றனர். தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய, அவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.