வீதி ஒழுங்கு விதிமுறை அமுல்

பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் வீதி ஒழுங்கு விதிமுறை அமுல்

by Staff Writer 28-05-2019 | 1:22 PM
Colombo (News 1st) நாட்டின் பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் வீதி ஒழுங்கு விதிமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் நெடுஞ்சாலைகள், வீதிப்பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த விதிமுறகளை பின்பற்றுவதற்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கால அவகாசம் நிறைவடைந்ததன் பின்னர் இதைக் கடுமையாக செயற்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். கொழும்பு நகரத்தை அண்மித்து முதல்கட்டமாக அமுல்படுத்தப்பட்ட இந்த வீதி ஒழுங்கு முறைகள் நேற்று (27ஆம் திகதி) முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.