தும்மலசூரிய சுற்றிவளைப்பில் 7 பேர் கைது

தும்மலசூரிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 7 பேர் கைது

by Staff Writer 28-05-2019 | 9:22 AM
Colombo (News 1st) தும்மலசூரிய - யதம்வெல பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனையின்போது 7 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 8 பெற்றோல் குண்டுகள், மோட்டார்சைக்கிள் மற்றும் 5,60,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. தும்மலசூரிய பகுதிகளைச் ​சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பேருவளை - மருதானை துறைமுக வீதிப்பகுதி மற்றும் மஹகொட உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்