குருநாகல் வைத்தியர் தொடர்பில் விசாரிக்க விசேட நிபுணர் குழு நியமனம்

by Staff Writer 28-05-2019 | 10:48 AM
Colombo (News 1st) குருநாகல் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் தொடர்பான விசாரணைக்காக விசேட நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 6 பேரைக் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா கூறியுள்ளார். இதேவேளை, குறித்த வைத்தியர் தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட குழு ஒன்று குருணாகல் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.