மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிங். பொன்னையாவின் பூதவுடல் தகனம்

by Staff Writer 27-05-2019 | 8:34 PM
Colombo (News 1st) மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிங்காரம் பொன்னையாவின் பூதவுடல் இன்று (27ஆம் திகதி) தகனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சென்றிருந்த அன்னார் சுகயீனம் காரணமாக தனது 73 ஆவது அகவையில் கடந்த வௌ்ளிக்கிழமை காலமானார். அன்னாரின் பூதவுடன் இன்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தொழில் உறவு அதிகாரியாக செயற்பட்ட சிங்காரம் பொன்னையா, 3 தடவைகள் மத்திய மாகாண சபையின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அன்னார், அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மாமனாரும் ஆவார்.