சரத் விஜேசூரியவை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

பேராசிரியர் சரத் விஜேசூரியவை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

by Staff Writer 27-05-2019 | 5:10 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்படாமல் இருப்பது தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்கு எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நியாமான சமூகத்துக்கான அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு இன்று (27ஆம் திகதி) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது. பேராசிரியர் சரத் விஜேசூரிய 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான ஊடக சந்திப்பு மற்றும் பகிரங்க கூட்டமொன்றில் ஆற்றிய உரை மற்றும் இணையத்தளங்களில் பிரசாரம் செய்த விடயங்கள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தீபாளி விஜேசுந்தர மற்றும் அச்சல வெங்கப்புலி உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.