பிரகாஷ்ராஜ் புதிய கட்சி ஆரம்பிக்க தீர்மானம்

பிரகாஷ்ராஜ் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க தீர்மானம்

by Staff Writer 27-05-2019 | 8:59 AM
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார். இந்திய மக்களவைத் தேர்தலில் பெங்களூரில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதேவேளை, போலி தேசபக்தியாளர்களுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் சுயேட்சையாக இருப்பதால் மக்களுடனான தொடர்பில் சில இடைவௌிகள் காணப்படக்கூடும் எனக் கருதுவதால் விரைவில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெங்களூர் முழுதும் பயணிக்க கிடைத்த தனக்கு குறுகிய காலத்தில் மக்களின் பிரச்சிணைகளுக்காக குரல் கொடுக்க முடியுமானதாகவும் அதனை தொடர்ந்து மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சினிமாவில் தொடர்ந்து தான் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் அதில் கிடைக்கும் பணத்தை அரசியலுக்காக செலவழிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனது புதிய கட்சியூடாக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர் எனவும் நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.