குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 பேர் வைத்தியசாலையில்

மினுவாங்கொடையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 26-05-2019 | 12:07 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை பகுதியிலுள்ள பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணிகளின்போது குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெற்றோர் சிலரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் கூறியுள்ளார்.