நாகவில வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

நாகவில வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 26-05-2019 | 7:13 AM
Colombo (News 1st) சிலாபம் - ஆனமடுவ பிரதான வீதியின் நாகவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றும் கெப் வாகனமொன்றும் மோதி நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17,18 மற்றும் 19 வயதான இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆண்டிகம மற்றும் கட்டைக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே விபத்தை எதிர்நோக்கியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளியங்குளம் பகுதியிலிருந்து பயணித்த லொறியொன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 38 வயதான முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில், லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.