by Staff Writer 26-05-2019 | 1:29 PM
Colombo (News 1st) தலைமன்னார் - உதயபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 70 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினமும் வடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.