சிலாபத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

சிலாபத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை: சந்தேகநபர் தலைமறைவு

by Staff Writer 26-05-2019 | 9:54 AM
Colombo (News 1st) சிலாபம் - திகன்வெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறினால் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 28 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்,. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்