வெனிசுவேலா சிறைக்குள் கலவரம்:29 கைதிகள் உயிரிழப்பு

வெனிசுவேலா சிறைக்குள் கலவரம்: 29 கைதிகள் உயிரிழப்பு

by Staff Writer 25-05-2019 | 6:06 PM
வெனிசுவேலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்டதாகவும் கலவரத்தை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்போது 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். 250 கைதிகளை மாத்திரமே உள்வாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட அகாரிகுவா சிறைச்சாலையில் தற்போது 540 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கைதிகளைப் பார்வையிடச் சென்ற ஒருவரை கைதிகள் பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர். அவரை மீட்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கலவரம் மூண்டதாக கைதிகள் உரிமைக்கான அமைப்பு ஒன்று கூறியுள்ளது. இதன்போது கைதிகள் கைக்குண்டுகள் மூலம் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.