245 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் இருவர் கைது

வட கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் இருவர் கைது

by Staff Writer 25-05-2019 | 5:03 PM
Colombo (News 1st) வடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிங்கி படகொன்றில் கேரளக்கஞ்சாவை கொண்டு சென்ற போதே சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார குறிப்பிட்டார்.