சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயன்ற 41பேர் கைது

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயன்ற 41 பேர் கைது

by Staff Writer 25-05-2019 | 3:36 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயன்ற 41 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் காலி கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நீண்டநாள் மீன்பிடியில் ஈடுபடும் படகொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். இலங்கையிலிருந்து 715 கடல்மைல் தொலைவில் சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். புகலிடக்கோரிக்கையாளர்களை காலி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.