சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நிதி மோசடி: சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 24-05-2019 | 3:56 PM
Colombo (News 1st) ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரால் நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களின் இடம்பெற்ற மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது. இதேவேளை,சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.