by Staff Writer 24-05-2019 | 5:00 PM
Colombo (News 1st) வெல்லவாய, ஊவா குடா ஓயா பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 6 பேர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்துள்ள ஏனைய மூன்று பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் குடா ஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.