இறால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

முந்தல் களப்பில் இறால் உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 24-05-2019 | 4:36 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல் களப்பு பகுதியில் இறால் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை கடற்றொழில் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதன்கீழ் முந்தல் களப்பில் 13 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. முந்தல் களப்பிற்கு உட்பட்ட சமிந்துகம, பனிச்சவில்லு, ஆண்டிமுனை, உடப்பு பகுதிகளிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.