பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிலிருந்து காவிந்த ஜயவர்தன இராஜிநாமா

by Staff Writer 24-05-2019 | 3:36 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இராஜிநாமா செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். காவிந்த ஜயவர்தனவிற்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இந்த தெரிவுக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த விசேட தெரிவுக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.