ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

by Staff Writer 24-05-2019 | 3:30 PM
Colombo (News 1st) கலகொட அத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் தமது கௌரவத்தையும் நன்றிகளையும் தேரர் கூறுவதாக அவரின் தாயார் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை அவர் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.