கொடக்கவெலவில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயம்

கொடக்கவெலவில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயம்

by Staff Writer 24-05-2019 | 4:10 PM
Colombo (News 1st) இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கொடக்கவெல கலஹிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். திருமண வைபவமொன்றில் கலந்துகொள்வதற்காக அவிசாவளைக்கு சென்ற தனியார் பஸ், மீண்டும் மாத்தறை நோக்கி பயணிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வாகனமொன்றின் பின்பக்கம் மோதி குறித்த தனியார் பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் 12 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்கலாக 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொடக்கவெல மற்றும் கஹவத்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.