சட்டவிரோதமாக தயாரித்த 4 தொன் பொலித்தீன் மீட்பு

வத்தளையில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 4 தொன் பொலித்தீன் மீட்பு

by Staff Writer 23-05-2019 | 10:45 AM
Colombo (News 1st) வத்தளை - ஹேகித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 4 தொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. உணவினைப் பொதிசெய்வற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீனே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. இரகசியமாகக் களஞ்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பொலித்தீன் தொகை மேலதிக விசாரணைகளுக்காக இன்று முற்பகல் தொம்பே பகுதிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.