ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம்

ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படும் திகதி அறிவிப்பு

by Chandrasekaram Chandravadani 23-05-2019 | 11:52 AM
Colombo (News 1st) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் ஜூன் மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று (23ஆம் திகதி) காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறித்த விவாதத்தை விரைவில் நடாத்துமாறு எதிர்க்கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, இவ்வாறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.