மல்வத்து மகாநாயக்க தேரர் - அமெரிக்க தூதுவர் இடையே பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 23-05-2019 | 8:23 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர் இன்று அமெரிக்க தூதுவரிடம் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார். பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படும் நிலையில், இருதரப்பிற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நேருக்கு நேர் கதைப்பது உகந்தது என தாம் கருதுவதாக மல்வத்து மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார். பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் தொடர்பில் உள்ள அபாயம் தமக்கு புரிவதாக அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz இதன்போது குறிப்பிட்டுள்ளார்.