பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

by Staff Writer 23-05-2019 | 8:09 AM
Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வு இன்று (23ஆம் திகதி) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர், இன்று காலை 9.30 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய அமர்வின்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் , அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர். இது தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில், தெரிவுக்குழு தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, பாராளுமன்ற அமர்வு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.