கொட்டாஞ்சேனையில் வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

கொட்டாஞ்சேனை வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 23-05-2019 | 12:14 PM
Colombo (News 1st) கொட்டாஞ்சேனை - புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் தனியாக வசித்துவந்த வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் இன்று (23ஆம் திகதி) காலை மீட்கப்பட்டுள்ளது. 67 வயதான வைத்தியர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.