வெல்லம்பிட்டிய OIC க்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

by Staff Writer 22-05-2019 | 12:09 PM
Colombo (News 1st) வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அவர் காலி பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஷங்கிரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இன்ஷாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான வெல்லம்பிட்டியவில் அமைந்துள்ள செப்புத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிணை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸூக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.