பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது 

வீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது: ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

by Staff Writer 22-05-2019 | 7:00 PM
Colombo (News 1st) வீதிகளுக்கான பெயர் பதாகைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். உள்நாட்லுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சிற்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர்ந்த வேறு எந்த மொழிகளிலும் வீதிகளுக்கான பெயர் பதாகைகளை காட்சிப்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.