வவுனியா வளாகத்தை தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்

by Staff Writer 22-05-2019 | 5:52 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் வர்த்தகம் மற்றும் வணிக விஞ்ஞானம் போன்ற பீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வணிக பீடத்தின் கீழ் நிதி, கணக்காய்வு,பொருளாதார விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ கல்விப் பிரிவும் , வணிக விஞ்ஞான பீடத்தின் கீழ் பௌதீக விஞ்ஞானமும் உயிரியல் விஞ்ஞான கல்விப் பிரிவும் உள்வாங்கப்படவுள்ளன. இந்த கற்கை நெறிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த பட்டப்படிப்பு கற்கைநெறிகளை ஆங்கில மொழியில் கற்பிக்கக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்வதற்காகவும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.