மின்சார கொள்வனவிற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

மின்சார கொள்வனவிற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 22-05-2019 | 5:24 PM
Colombo (News 1st) மின்சார நெருக்கடிக்கு தீர்வாக கெரவலப்பிட்டிய மற்றும் காலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார நிலையங்களூடாக 400 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 200 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த மாதம் முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு அலகொன்று 26 ரூபா 20 சதத்திற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. காலியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி நிலையத்தினூடாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் 9 மாதங்களுக்கு 200 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.