விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 32 சந்தேகநபர்களுக்கு பிணை

by Staff Writer 22-05-2019 | 1:24 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை நகரில் வன்முறைகள் இடம்பெற்றதன் பின்னர், அநாவசியமாக ஒன்றுகூடி அமைதியின்மையைத் தோற்றுவிப்பதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 32 சந்தேகநபர்கள் இன்று (22ஆம் திகதி) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் கேசர C.A. சமரதிவாகர முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், பிணையாளர்கள் சந்தேகபர்களின் நெருங்கி உறவினர்களாக இருக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்துள்ளார். இந்தநிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.