அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீடிப்பு

அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 22-05-2019 | 5:31 PM
Colombo (News 1st) நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்ட ஏற்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி இன்று வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொடர்ந்தும் அவசரகால சட்ட ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.