நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

by Staff Writer 21-05-2019 | 12:48 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (21ஆம் திகதி) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் மதியம் 1 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.