ஹேமசிறி பெர்ணான்டோ, பூஜித் ஜயசுந்தர மீது விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மீதான விசேட விசாரணை ஆரம்பம்

by Staff Writer 20-05-2019 | 8:38 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் ஆலோசனையின்படி, விசாரணைகள் முன்னெடுப்படுவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.