மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்

மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 20-05-2019 | 5:39 PM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் இன்று (20ஆம் திகதி) மாலை வேளையில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.