கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை நாளை

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை நாளை ஆரம்பம்

by Staff Writer 20-05-2019 | 7:18 PM
Colombo (News 1st) கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 19 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.