ஈஸ்டர் தாக்குதல்: 89 பேரிடம் தொடர்ந்தும் விசாரணை

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் 89 பேரிடம் தொடர்ந்தும் விசாரணை

by Staff Writer 20-05-2019 | 7:08 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று (20ஆம் திகதி) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். அவர்களில் 69 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவிடமும் 20 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்