by Staff Writer 20-05-2019 | 4:30 PM
Colombo (News 1st) இங்கிலாந்தில் அதிகமான சிறுவர்கள் உளநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவின் ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
சமூகத்திலும் பாடசாலை சூழலிலும் சிறுவர்களுக்கான ஆதரவு சரியாக வழங்கப்படாமையே, இந்த நிலைமைக்கான காரணம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்டு 250 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.