by Staff Writer 19-05-2019 | 7:16 PM
Colombo (News 1st) தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் பாராளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகலில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருடன் மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தடுத்துவைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.