சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

by Staff Writer 19-05-2019 | 4:09 PM
Colombo (News 1st) நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை மறுதினம் (21ஆம் திகதி) திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக பல்கலைக்கழக விடுதியில் தங்கி கற்கும் மாணவர்களை நாளை (20ஆம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்கு இடையில் சமூகமளிக்குமாறு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி. கித்சிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது மாணவர் பதிவுப் புத்தகத்தை கொண்டுவருமாறு பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புக் கருதி அறிவிக்கப்பட்டுள்ள தினத்தின் பின்னர் வருகை தருவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அநுராதபுரம் ஶ்ரீலங்கா பிக்‌ஷு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை (20ஆம் திகதி) ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர்களை இன்று (19ஆம் திகதி) விடுதிகளுக்கு வருகைதருமாறு பல்கலைக்கழக நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்