வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 762 கைதிகள் விடுதலை

by Staff Writer 18-05-2019 | 3:19 PM
Colombo (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். கைதிகளை விடுதலை செய்வதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. 736 ஆண் கைதிகளும், 26 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 117 கைதிகளும் பல்லேகல திறந்த சிறைச்சாலையில் இருந்த 62 கைதிகளும் மஹர சிறைச்சாலையில் இருந்த 55 கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த 50 கைதிகளும் பலன்சேன சிறை முகாமில் இருந்த 53 கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றிற்கு தண்டனை அனுபவிக்கும் கைதிகளைத் தவிர்த்து ஏனைய சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.