முதன்முறையாக ரோஹிஞ்யா அகதிகளுக்கு அடையாள அட்டை 

வங்கதேசத்தில் ரோஹிஞ்யா அகதிகளுக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

by Bella Dalima 18-05-2019 | 5:29 PM
வங்கதேசத்தில் உள்ள 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளுக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அடையாள அட்டை மூலம் எதிர்காலத்தில் அவர்கள் மியன்மார் திரும்புவதற்கான அடையாளச்சான்று கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அகதிகள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் இந்த அடையாள அட்டை உதவிகரமாக இருக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த 2017-இல் மியன்மார் இராணுவத்தின் அடக்குமுறைக்கு அஞ்சி 7.4 இலட்சம் ரோஹிஞ்யா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.