திருமலை வளாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் 22 ஆம் திகதி ஆரம்பம்

by Staff Writer 17-05-2019 | 3:25 PM
Colombo (News 1st) கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. எனினும், முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வளாக முதல்வர், பேராசிரியர் வி. கனகசிங்கம் தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த நேரத்திற்கு வருகை தராத மாணவர்கள் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் மேலதிக விபரங்களை கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வளாக முதல்வர் கூறியுள்ளார். இதேவேளை, ஊவா - வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய , மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து விடுதிகளுக்கு செல்ல முடியுமென பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்