விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த பாலஸ்தீன பிரஜைக்கு விளக்கமறியல்

by Staff Writer 16-05-2019 | 5:29 PM
Colombo (News 1st) விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த பாலஸ்தீன பிரஜை ஒருவர் கண்டி - தென்னகும்புற பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னகும்புற பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்குப் பெற்று குறித்த பாலஸ்தீன பிரஜை வசித்து வந்துள்ளதாக கண்டி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிட்டது. வர்த்தக விசாவின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் விசா இன்றி நாட்டில் தங்கியுள்ளார். சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.