உரம் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதாக முறைப்பாடு

உரம் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதாக முறைப்பாடு

by Staff Writer 16-05-2019 | 2:20 PM
Colombo (News 1st) விவசாயத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட உரம் வேறு தேவைகளுக்கு சட்டவிரோதமான முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக, தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் அஜித் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை, உர இறக்குமதிக்காக வருடாந்தம் 35 பில்லியன் ரூபா செலவிடப்படுதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.