சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

by Staff Writer 15-05-2019 | 7:59 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் என, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டீ.பி. கித்சிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் மாணவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை எடுத்துவருமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் தினத்திற்கு முன்னர் பல்கலைக்கழகத்திற்கு வருகைதர முடியாது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அனுராதபுரம் ஶ்ரீலங்கா பிக்‌ஷு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதிக்கு சமூகளிக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.