வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தம்

வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் 2 மணி நேரங்களுக்கு தளர்த்தம் 

by Bella Dalima 14-05-2019 | 3:31 PM
Colombo (News 1st) வட மேல் மாகாணத்தில் இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 6 மணிக்கு மீண்டும் அமுலாகும் ஊரடங்கு சட்டம் நாளை (15) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.