மத்திய மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்

மத்திய மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவு

by Staff Writer 14-05-2019 | 4:18 PM
Colombo (News 1st) மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் இன்று மூடுமாறு காலால்வரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் வேண்டுகோளுக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காலால்வரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார். இந்த உத்தரவிற்கு அமைய, மத்திய மாகாணத்தில் இன்று காலை முதல் திறக்கப்பட்டிருந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்போது மூடப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். கண்டி , நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.