இரவு 9 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

இரவு 9 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

by Bella Dalima 14-05-2019 | 5:30 PM
Colombo (News 1st) இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15) காலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வட மேல் மாகாணத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை (15) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்